Friday, December 29, 2006

அகரம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருவள்ளூவர்


எனக்கு சில நாட்களாகவே தமிழில் என் எண்ணங்களை வலை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆங்கில புது வருடப்பிறப்பிற்கு புதிதாக என்ன உறுதி மொழி எடுத்துக்கொள்ள போகிறாய் என்று எனது நண்பன் கேட்டதும் முதலில் இது தான் ஞாபகம் வந்தது.எனக்கு அவ்வாறு உறுதி மொழி எடுத்து அதை செயலாற்றுவது என்ற பழக்கம் எல்லாம் இது வரை இருந்தது இல்லை :)
ஆனால் இந்த முறை என்னையும் அறியாமல் கட கட வென்று ஆரம்பித்து விட்டேன். சரி! எதை முதலில் பதிவு செய்வது? குழப்பத்தில் இருந்த என்னை காப்பாற்றியவர்கள் தமிழன்னையும் வள்ளுவப்பெருந்தகையும் .
தமிழன்னை தன் முதல் எழுத்தை தந்தாள்! அய்யன் தன் முதல் குறளைத் தந்தான்! சரி அப்படி என்ன சிறப்பு இந்த அகரத்துக்கு? அம்மா என்ற உலகின் உயர்ந்த தெய்வத்துக்கு மனித மொழியின் வடிவம் குடுத்ததை விட வேறு ஒரு சிறப்பும் வேண்டு்மோ! இந்த உலகின் முதன்மையானதும் மிக உயர்ந்தத உணர்வுமான தாய்மைக்கு உரை குடுத்த இந்த அகரம் பெரும் பேறு பெற்றது!
சரி! அய்யனின் குறளுக்கும் அகரத்துக்கும் தாய்க்கும் என்ன சம்பந்தம்?
எதற்காக என்னுடைய மூளையில் திடீரென்று இந்த எண்ண அலைகள்!

அய்யன் குறளின் முழு அர்த்தம் புரிவதற்காகவோ?? :)

மனித மொழிக்கு அகரம் எப்படி முதன்மையானதொ அது போன்று இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் முதன்மையானவள் அம்மா என்னும் கடவுள்! இவ்வுலகை இயக்கும் உயிரானவள் அவள்!! ஆம் இது தான் இக் குறளுக்கு பதவுரை ஆக இருக்க முடியும்!

இக்குறளின் வாயிலாக வள்ளுவன் தாயை வணங்கி ஆரம்பித்து உலகம் போற்றும் உலகப்பொதுமறை கண்டான்!! இவ்வுலக மாந்தருக்கான வாழ்வியல் நூல் பிறந்தது!

மீண்டும் சந்திக்கும் வரை ....
ஒரு சிறு இடைவெளி ....

நன்றி!

4 comments:

AKV said...

Welcome Jana.. Congrats on your first Blog. It assumes more significance as this apears to be the first time you had decided to pursue your tamil interests inline with your new year resolution..

All the best.. Looking forward to read more of your words in the coming days..

-ganeshkj said...

Good start Jana...
இந்தக் குறளை அம்மாவோடு இணைத்து இதுவரை நான் சிந்தித்ததில்லை. Hats off to your lateral thinking..

இது போல் இன்னும் பல குறள்களுக்கு விளக்கம் அளிக்கலாமே !!

Jana said...

நன்றி AKV அவர்களே! வெகு சீக்கிரத்தில் அடுத்த பதிவை பதிவு செய்கிறேன்!

Jana said...

கணேஷ் அவர்களே! மிக்க நன்றி! மற்ற குறள்களும் முயற்சி செய்கிறேன்!