
நான் பார்த்த சில மேலை மொழிப்படங்களில் என் மனதை வெகுவாகக் கவர்ந்த திரைப்படம் இத்தாலிய மொழியில் வெளி வந்த Life is Beautiful . இப்படத்தை ஆங்கில வசனங்களுடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் மனித உணர்வுகளுக்கு மொழி முக்கியமில்லை என்பதை படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே நான் உணர்ந்தேன்.
இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியில் வாழ்ந்த ஒரு யூத இளைஞனும் அவனது குடும்பமும் சந்திக்கும் இன்னல்களும் அதில் இருந்து அவன் தன் குடும்பத்தை காப்பாற்றுவதும் தான் கதை.இதற்கு அழகான, உணர்வுப்பூர்வமான,வாழ்வோடு ஒன்றிய திரைக்கதை அமைத்து, இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ள ராபர்டொ பெனிக்னி (Roberto Benigni) உலகத்தி்ரைத்துரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இவரது நிஜ வாழ்க்கை துணைவியான நிகொலொட்டா (Nicoletta) கதையின் நாயகி. இத்தாலியப் பெண்ணின் கதாபத்திரத்தில் வரும் இவருக்கும் ராபெர்டொவுக்கும் வரும் காதல் மனதை வருடும் இனிய பூந்தெண்றல் காற்று!காதலுக்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தை என்று அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நாயகன்-நாயகி வாழ்வில் பூகம்பம் கிளப்புகிறது ஹிட்லரின் நாஜிப் படையெடுப்பு.இருபதாம் நூற்றண்டின் மிக மோசமான நிகழ்வான ஹொலொகஸ்ட் (Holocaust) என்ற சித்திரவதைகளை மெல்லிய வலியுணர்வோடும் நகைச்சுவையோடும் சொல்லியிருப்பது அருமை.
"இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க மலை போன்ற துன்பம் நெருங்கும் போதும் அதை தனக்கெயுரிய நகைச்சுவையுடன் தன் நாண்கு வயது மகனுக்கு அதை ஒரு போட்டி என்று கூறி சமாளிப்பது ராபெர்டொ வின் பண்பட்ட நடிப்பிற்கு எடுத்துக்காட்டு. "என்னை கூட்டிகொண்டு போ" என்று காதல் வயப்பட்டவுடன் நாயகனிடத்தில் கூறும் இடத்திலும், தன் கணவனும் மகனும் சிறை பிடிக்கப்படும் போது அலறி அடித்துக்கொண்டு ஒடி நாஜியிடம் கெஞ்சி தானும் அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும் போதும் நாயகி மிளிர்கிரார்!
இன்னல்களை இலை மறை காயாக காண்பிற்கும் தொடக்க காட்சிகளான யூதக்குதிரை என்று வண்ணம் பூசி வெறுப்பை உமிழ்வதும் , யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்ற எச்சரிக்கை வாசகங்களும் இயக்குனரின் திறமைக்கு சான்று. "அமைதி தான் ஒங்கி ஒலிக்கும் குரல்" போன்றவை வசனங்களின் வீரியத்துக்கு ஒரு சிறு மாதிரி.
சிறிதும் சலிக்காமல் செல்லும் அழகிய இரண்டு மணி நேர கவிதை போன்ற இந்த திரைப்படம் முடிவுறும் போது என் இதயத்தின் ஓரத்தில் எழுந்த ஒரு உணர்வு என்னுள் உள்ள மனிதத்தை உறுதி செய்தது! மீண்டும் ஒரு முறை உரக்க கூவியது என் மனம் "வாழ்க்கை அழகானது"
இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியில் வாழ்ந்த ஒரு யூத இளைஞனும் அவனது குடும்பமும் சந்திக்கும் இன்னல்களும் அதில் இருந்து அவன் தன் குடும்பத்தை காப்பாற்றுவதும் தான் கதை.இதற்கு அழகான, உணர்வுப்பூர்வமான,வாழ்வோடு ஒன்றிய திரைக்கதை அமைத்து, இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ள ராபர்டொ பெனிக்னி (Roberto Benigni) உலகத்தி்ரைத்துரையில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இவரது நிஜ வாழ்க்கை துணைவியான நிகொலொட்டா (Nicoletta) கதையின் நாயகி. இத்தாலியப் பெண்ணின் கதாபத்திரத்தில் வரும் இவருக்கும் ராபெர்டொவுக்கும் வரும் காதல் மனதை வருடும் இனிய பூந்தெண்றல் காற்று!காதலுக்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தை என்று அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நாயகன்-நாயகி வாழ்வில் பூகம்பம் கிளப்புகிறது ஹிட்லரின் நாஜிப் படையெடுப்பு.இருபதாம் நூற்றண்டின் மிக மோசமான நிகழ்வான ஹொலொகஸ்ட் (Holocaust) என்ற சித்திரவதைகளை மெல்லிய வலியுணர்வோடும் நகைச்சுவையோடும் சொல்லியிருப்பது அருமை.
"இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க மலை போன்ற துன்பம் நெருங்கும் போதும் அதை தனக்கெயுரிய நகைச்சுவையுடன் தன் நாண்கு வயது மகனுக்கு அதை ஒரு போட்டி என்று கூறி சமாளிப்பது ராபெர்டொ வின் பண்பட்ட நடிப்பிற்கு எடுத்துக்காட்டு. "என்னை கூட்டிகொண்டு போ" என்று காதல் வயப்பட்டவுடன் நாயகனிடத்தில் கூறும் இடத்திலும், தன் கணவனும் மகனும் சிறை பிடிக்கப்படும் போது அலறி அடித்துக்கொண்டு ஒடி நாஜியிடம் கெஞ்சி தானும் அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளும் போதும் நாயகி மிளிர்கிரார்!
இன்னல்களை இலை மறை காயாக காண்பிற்கும் தொடக்க காட்சிகளான யூதக்குதிரை என்று வண்ணம் பூசி வெறுப்பை உமிழ்வதும் , யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை என்ற எச்சரிக்கை வாசகங்களும் இயக்குனரின் திறமைக்கு சான்று. "அமைதி தான் ஒங்கி ஒலிக்கும் குரல்" போன்றவை வசனங்களின் வீரியத்துக்கு ஒரு சிறு மாதிரி.
சிறிதும் சலிக்காமல் செல்லும் அழகிய இரண்டு மணி நேர கவிதை போன்ற இந்த திரைப்படம் முடிவுறும் போது என் இதயத்தின் ஓரத்தில் எழுந்த ஒரு உணர்வு என்னுள் உள்ள மனிதத்தை உறுதி செய்தது! மீண்டும் ஒரு முறை உரக்க கூவியது என் மனம் "வாழ்க்கை அழகானது"
1 comment:
Hi Jana,
You have made a very good observation of the film. Your writing looks very fluent. திருக்குறளை விடாமல் quote செய்வது நன்றாக இருக்கிறது :)
Will definitely watch this film when i get chance... for now, it reminds me abt Ruskin Bond's words -
"And when all the wars are done, a butterfly will still be beautiful".
Post a Comment